Breaking
தேசிய இளைஞர் கொள்கை வரைபு குறித்து இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் ஆராய்வு
PoliticsVirakesari

தேசிய இளைஞர் கொள்கை வரைபு குறித்து இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் ஆராய்வு

July 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் நடைபெற்றது.
  2. 02தேசிய இளைஞர் கொள்கை வரைவு குறித்து விவாதமானது.
  3. 03இளைஞர்களின் கருத்துகளைப் பெறுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
  4. 04ஒன்றிய உறுப்பினர்களின் யோசனைகள் தேவையானவை.
  5. 05இளைஞர் சமூகத்தின் குரலைப் politikk செய்ய எடுக்க வேண்டும்.

தேசிய இளைஞர் கொள்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைபு குறித்து இளைஞர்களின் கருத்துகளையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் ஆராயப்பட்டது.

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த விடயம் ஆராயப்பட்டது.

தேசிய இளைஞர் கொள்கை வரைவு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

இளைஞர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொள்கையில் மேலும் பயனுள்ள வகையில் உள்ளடக்கிக்கொள்வதற்காக ஒன்றிய உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இளைஞர் சமூகத்தின் குரலை கொள்கை உருவாக்கும் செயல்முறையில் மேலும் பயனுள்ள வகையில் இணைத்துக்கொள்வதற்காக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253351
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
இளைஞர்கள்பாராளுமன்றம்கொள்கைசெயற்பாடு
BestWeb.lk Top Web 2026 June Qualified