Breaking
Sri Lanka Evaluates Japanese Qdenga VaccineCOPE, COPA Reports Can Now Trigger CID, Bribery ProbesEx-State Minister’s Son Arrested Over Rs. 20 Mn RobberyCourt Reissues Arrest Warrant for Basil RajapaksaOpposition Takes Aim at Justice Minister | But Not Everyone Joins the FightSri Lanka’s Inflation Hits 6.5% in JuneDesperate Cries Heard Before Deadly Factory Inferno Took Five Livesவிக்ரம் -1இன் சுற்றுப்பாதை வெற்றி : இந்தியாவின் 100 பில்லியன் டொலர் விண்வெளிப் பொருளாதாரத்திற்கு எவ்வாறு வலு சேர்க்கும்?Fastest Man in South Asia Calls Time on Glittering CareerNavy Seizes Over 2.6 Tonnes of Narcotics So Far This YearSri Lanka Evaluates Japanese Qdenga VaccineCOPE, COPA Reports Can Now Trigger CID, Bribery ProbesEx-State Minister’s Son Arrested Over Rs. 20 Mn RobberyCourt Reissues Arrest Warrant for Basil RajapaksaOpposition Takes Aim at Justice Minister | But Not Everyone Joins the FightSri Lanka’s Inflation Hits 6.5% in JuneDesperate Cries Heard Before Deadly Factory Inferno Took Five Livesவிக்ரம் -1இன் சுற்றுப்பாதை வெற்றி : இந்தியாவின் 100 பில்லியன் டொலர் விண்வெளிப் பொருளாதாரத்திற்கு எவ்வாறு வலு சேர்க்கும்?Fastest Man in South Asia Calls Time on Glittering CareerNavy Seizes Over 2.6 Tonnes of Narcotics So Far This Year
நீதித்துறையை அரசியல்மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிடவேண்டும் ; இல்லையேல் பாரிய விளைவுகள் நேரிடும் - ஹர்ஷன ராஜகருண
WorldVirakesari

நீதித்துறையை அரசியல்மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிடவேண்டும் ; இல்லையேல் பாரிய விளைவுகள் நேரிடும் - ஹர்ஷன ராஜகருண

July 21, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிக்கு மக்கள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு.
  2. 02அரசாங்கம் நீதித்துறையை அரசியல்மயமாக்கும் முயற்சியில் உள்ளது.
  3. 03ஹர்ஷன ராஜகருண புதிய தகவல்களை அறிவிக்கிறார்.
  4. 04ஜனாதிபதியின் நடவடிக்கைகள் சுயாதீனத்திற்கு மாறுபடுகிறது.
  5. 05முன்னாள் நீதியரசர் பதவி நீக்கம் தொடர்பான எதிர்ப்பு.
  6. 06இந்நிலையில் காரணமாக அரசாங்கம் தோல்வி அடைவது உறுதி.

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஒட்டுமொத்த மக்களும் சர்வதேச அமைப்புக்களும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. நீதித்துறையை அரசியல்மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். இல்லையேல் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற பொதுமனுக்கள் பற்றிய குழுவின் நடவடிக்கைமுறை மற்றும் செயலாற்றுகை பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் நீதித்துறையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது. இதன் ஒரு அங்கமாகவே பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறது.

நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் முயற்சிக்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்புக்கள் வெளியாகியுள்ள நிலையில் அரசாங்கம் அதனை கருத்திற்கொள்ளாமல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும்போது நீதித்துறையை பாதுகாக்க வேண்டும், சுயாதீனத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று உரத்துக் குறிப்பிட்டார். ஆனால் தற்போது அதற்கு எதிர்மறையாக செயற்படுகிறார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை அப்போதைய அரசாங்கம் முறையற்ற வகையில் பதவி நீக்கியது. இதற்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்பு வெளிப்பட்டது. இந்த முறையற்ற செயற்பாடுதான் அந்த அரசாங்கம் தோல்வியடைவதற்கு பிரதான காரணியாக அமைந்தது. இந்த அரசாங்கமும் அவ்வாறான வழியில்தான் தற்போது பயணிக்கிறது. பெறுபேறு நிச்சயம் கிடைக்கும் என்றார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253908
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
நீதித்துறைஅரசாங்கம்எதிர்ப்புசுயாதீனம்பதவி நீக்கம்
BestWeb.lk Top Web 2026 June Qualified