Breaking
ஒட்டுசுட்டான் - தண்டுவான் பகுதியில் வீடுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார் அமைச்சர் சுசில் ரணசிங்க
WorldVirakesari

ஒட்டுசுட்டான் - தண்டுவான் பகுதியில் வீடுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார் அமைச்சர் சுசில் ரணசிங்க

July 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01முல்லைத்தீவு மாவட்டத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் அடிக்கல் நாட்டப்பட்டது.
  2. 02இ.நிசாந்தன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
  3. 03சுசில் ரணசிங்க புதிய வீடுகளை அடிக்கல் போட்டார்.
  4. 04அதற்காக ரூபா 50 இலட்சம் மதத்தின் வீடுகள் வழங்கப்படுகின்றன.
  5. 05நிகழ்வில் பல அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்டுவான் பகுதியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க அவர்களால் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீடுகளுக்கும் ரூபா 50 இலட்சம் பெறுமதியான புதிய வீடுகள் அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வீட்டுத்திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253619
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
டித்வாபுயல்முல்லைத்தீவுவீடுகள்அடிக்கல்நாட்டுதல்
BestWeb.lk Top Web 2026 June Qualified