Breaking
Malaysian National Arrested At BIA With Cocaine Worth Rs. 90.8 Millionசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleMalaysian National Arrested At BIA With Cocaine Worth Rs. 90.8 Millionசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL role
பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால் அதிரடியாக மீட்பு: ‘விஜயபாகு’ கப்பல் சாதனை!
WorldVirakesari

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால் அதிரடியாக மீட்பு: ‘விஜயபாகு’ கப்பல் சாதனை!

July 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01பொத்துவில் கடலில் மீன்பிடி படகு ஆபத்திற்குள்ளாகி இருந்தது.
  2. 02உள்நாட்டு மீன்பிடி படகு மீனவரை கடற்படை மீட்டது.
  3. 03கட்டுப்படையினரால் அவசர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  4. 04பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்ட மீனவர், கடற்படையால் முதலுதவி பெற்றார்.
  5. 05மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
  6. 06கடற்படை எப்போதும் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு தயார்.

இலங்கைக்கு கிழக்கே சுமார் 15 கடல்மைல் தொலைவில் உள்ள பொத்துவில் கடற்பரப்பில், சீரற்ற வானிலை காரணமாக ஆபத்தில் சிக்கியிருந்த உள்நாட்டு மீன்பிடி படகு ஒன்றின் மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

பொத்துவில் கடலில் அனர்த்தத்திற்குள்ளான மீன்பிடி படகு தொடர்பாக கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால் வழங்கப்பட்ட அவசர அறிவித்தலுக்கு அமைய இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நிலவிய மிகவும் மோசமான வானிலைக்கு மத்தியிலும், 2026 ஜூலை 17 ஆம் திகதி இலங்கை கடற்படையின் 'விஜயபாகு' கப்பல் மற்றும் மேலதிக கடற்படைப் படகுகளைப் பயன்படுத்தி அந்த கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் போதே, பொத்துவிலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்த மீனவர் அவரது மீன்பிடி படகில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார்.

இவ்வாறு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மீனவருக்கு, இலங்கை கடற்படைக் கப்பலான 'விஜயபாகு' மூலம் உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அவர் மிக விரைவாக கரைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொழும்பு கடற்படை பிரிவில் அமைந்துள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (MRCC) தொடர்ச்சியான ஒருங்கிணைப்புடன், இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் சிக்கியிருக்கும் கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினரைப் பாதுகாப்பதற்காக, இவ்வாறான உடனடி மீட்பு நடவடிக்கைகளை எடுக்க இலங்கை கடற்படை எப்போதும் தயார் நிலையில் உள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253571
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
மீன்பிடிகடற்படையினர்ஆபத்துமருத்துவமனைமைக்கு
BestWeb.lk Top Web 2026 June Qualified