முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரட்ண உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இவர் இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக கடமை புரிந்தார்.
அத்துருகிரியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி இது ஒரு உயிர் மாய்ப்பு சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டாலும், மரணத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து அத்துருகிரிய பொலிஸார் மற்றும் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சி.டி. விக்ரமரத்ன இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ஒரு சிரேஷ்ட அதிகாரியாவார்.
