
Colombo (News 1st) - பதிவு செய்யப்படாத அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
முதியோர் இல்லங்களை பதிவு செய்து கொள்வதற்காக எதிர்வரும் செப்ம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் பதிவு செய்யாத முதியோர் இல்லங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிஹிதும் தெரிவித்தார்.
நாடு முழுவதுமுள்ள 459 முதியோர் இல்லங்களில் இதுவரை 148 இல்லங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய முதியோர் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
