Breaking
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அவசர கலந்துரையாடல்
ScienceVirakesari

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அவசர கலந்துரையாடல்

June 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01டெங்கு பரவலால் சுகாதார அமைச்சின் கூடுதல் நடவடிக்கைகள் தேவை.
  2. 02அமைச்சர் நளிந்த ஜயதிஸ், சர்வதேச அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
  3. 03ஜூன் 20 வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் கொண்டாடப்படுகிறது.
  4. 0414 மாவட்டங்களில் அவசர கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும்.
  5. 05பொதுநிர்வாக அமைச்சுடன் இணைந்து வேலை செய்ய அதிகாரிகள் தயார் ஆக வேண்டும்.
  6. 06கொள்கைகளை உருவாக்கும் போது பொதுமக்கள் பங்களிப்பு முக்கியம்.
  7. 07உள்ளூராட்சி மன்றங்களின் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பை உறுதி செய்ய வேண்டும்.

டெங்கு பரவல் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் சர்வதேச அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நுளம்பகளை பட்டுபடுத்துவதுக்கான திட்டங்களை வகுப்பதோடு, வைத்தியசாலை கட்டமைப்புகளைத் தயார்படுத்துமாறு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவது மற்றும் அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் திங்கட்கிழமை (15) அமைச்சில் நடைபெற்றது. திங்கட்கிழமை முதல் (15) முதல் ஜூன் 20 ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

டெங்கு பரவல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருணாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய 14 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினரை அழைத்து, பொதுநிர்வாக அமைச்சின் ஒருங்கிணைப்புடன் அவசர கலந்துறையாடல் ஒன்றை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெங்கு ஒழிப்புத் திட்டங்களை பொதுமக்களின் பங்களிப்புடன் முன்னெடுப்பதன் அவசியம், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், சர்வதேச அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு டெங்குவை முழுமையாக ஒழிப்பதற்கான திட்டங்களை வகுக்குமாறும், வைத்தியசாலை கட்டமைப்புகளைத் தயார்படுத்த வேண்டும் என்றார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250028
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
டெங்குசுகாதாரம்நாட்டின்_சுகாதார_நிலைஅமைச்சின்மைவிழிப்புணர்வு
BestWeb.lk Top Web 2026 June Qualified