(நெவில் அன்தனி)
சவுத்ஹாம்ப்டன், ரோஸ் பௌல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மிகவும் தீர்மானம் மிக்க குழு 2 க்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு 151 ஓட்டங்களை நியூஸிலாந்து வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீரமானித்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை பந்துவீச்சாளர்களை ஆரம்பத்தில் எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்ட நியூஸிலாந்து பின்னர் ஓட்டவேகத்தை சற்று அதிகரித்துக்கொண்டது.
அணித் தலைவி அமேலியா (மெலி) கேர், சிரேஷ்ட வீராங்கனை சொஃபி டிவைன் ஆகிய இருவரும் தலா 45 ஓட்டங்களைப் பெற்றதால் நியூஸிலாந்து ஓரளவு பலமான நிலையை அடைந்தது.
பந்துவீச்சில் காவிஷா டில்ஹாரி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
நியூஸிலாந்து 150 ஓட்டங்களைத் தக்கவைக்குமா, 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அடையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
