யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதி, இலங்கை அரசாங்கத்தினால் இந்த ஆண்டில் மாத்திரம் 800 வீடுகளை நிர்மாணிக்கும் விசேட திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் சவாக்கச்சேரி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு வீடுகள் வெள்ளிக்கிழமை (17) மக்கள் பாவனைக்காக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தலைமையில்உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
சுமார் 17 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டிருந்த இந்த மக்களின் அடிப்படைத் தேவையை தற்போதைய அரசு நனவாக்கியுள்ளதுடன், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இலங்குமரனும் கலந்துகொண்டிருந்தார்.
கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளாலும், தொலைநோக்கற்ற அரசாங்கங்களாலும் முறையாகக் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட வட பகுதி மக்களுக்கு இந்த வீட்டுத்திட்டம் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையான நல்லிணக்கம் என்பது வெறும் அரசியல் மேடைப் பேச்சுக்களில் இல்லை என்றும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இத்தகைய அபிவிருத்திகளிலும், சம வாய்ப்புகளை வழங்குவதிலுமே தங்கியுள்ளது என்றும் இந்த நிகழ்வின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
