கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றி வந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, அங்கிருந்து விடுவிக்கப்பட்டு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்த புதிய பதவியின் கீழ் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
