எரிபொருள் விநியோகத்துக்காக தற்போது பிரயோகத்தில் உள்ள QR முறைமையை நீக்குவதற்கு இதுவரை எந்தத் திட்டமும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் தற்போது நிலவும் நெருக்கடியை கருத்திற்கொண்டு நாட்டில் QR நடைமுறையைத் தொடரவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே குறிப்பிட்டுள்ளார்.
இந்த QR முறைமை தற்போது அமுலில் இருப்பதால் எரிபொருள் மாத்திரமன்றி டொலர் இருப்பும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
