வடக்கு மாகாண முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு நியமனங்கள் வழங்கும் நிகழ்வும், புதிதாகச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட வருமான வரிப் பரிசோதகர்கள் மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வும் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதல் முகாமைத்துவ சேவை அதிசிறப்புத் தரம்: 26 பேர் இவர்களில் 11 பேர் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களாகவும், 15 பேர் நிர்வாக உத்தியோகத்தர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருமான வரிப் பரிசோதகர்கள்: 14 பேர். நூலகர்கள்: 02 பேர்.நியமனம் பெற்றுள்ளார்கள்.
