Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
நோர்வூட் தேயிலை தோட்டத்தில் மாணிக்கக் கல் அகழ்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் மீள மூடப்படவில்லை ; சுற்றுச்சூழல் பாதிப்பு ; டெங்கு பரவும் அபாயம் - மக்கள் விசனம்
ClimateVirakesari

நோர்வூட் தேயிலை தோட்டத்தில் மாணிக்கக் கல் அகழ்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் மீள மூடப்படவில்லை ; சுற்றுச்சூழல் பாதிப்பு ; டெங்கு பரவும் அபாயம் - மக்கள் விசனம்

July 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01நோர்வூட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் மாணிக்கக் கல் அகழ்வுக்காக குழிகள் இருந்துள்ளன.
  2. 02இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
  3. 03குழிகள் மூடப்படாததால் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல் உள்ளனர்.
  4. 04சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்ந்து வருவதால் சிக்கல்களின் வளர்ச்சி ஏற்படுகிறது.
  5. 05அகழ்வுப் பணிகள் சரியாக நடக்காமல், குழிகள் பாதுகாப்பற்ற நிலைக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
  6. 06நிலத்தடி நீர் குறைவுடன், மழைநீரால் பிற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

நோர்வூட் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில், மாணிக்கக் கல் அகழ்விற்காகத் தோண்டப்பட்ட குழிகள் இதுவரை மீண்டும் மூடப்படவில்லை என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குழிகள் தோண்டப்பட்டு, அவை மூடப்படாததால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நோர்வூட் பொலிஸ் நிலையத்துக்கு மிக அருகில் உள்ள தேயிலை தோட்டத்திலும், கெசல்கமு ஓயா பகுதியிலும் நோர்வூட் என்.சி தேயிலைத் தோட்டப் பிரிவிலும், மாணிக்கக் கல் அகழ்வுக்காகத் தோண்டப்பட்ட குழிகள் இதுவரை மூடப்படவில்லை.

மேலும், அகழ்வில் ஈடுபட்டவர்கள் தேயிலை மரங்களை வேரோடு பிடுங்கி, சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்ந்தெடுத்து வருவதாகவும், இதனால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, தேயிலைத் தோட்டத்தில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகமும் கூறுகின்றன.

நேற்று (15) இரவு நோர்வூட் தோட்டத்துக்குச் சொந்தமான என்.சி தேயிலைப் பிரிவில், சிலர் தேயிலைச் செடிகளுக்கு அடியில் உள்ள மாணிக்கக் கல் அடங்கிய மண்ணைத் தோண்டி எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் தோண்டப்பட்ட குழிகளால், தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

என்.சி தேயிலைத் தோட்டத்தில் பல குழிகள் தோண்டப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நோர்வூட் பொலிஸாரிடம் புகார் அளித்த போதிலும், இதுவரை நிரந்தரத் தீர்வு எதுவும் காணப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

நோர்வுட் என்.சி தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் பாயும் கெசல்கமு ஓயா அருகில் தொடர்ந்து இரவில் 200க்கும் மேற்பட்டோர் மாணிக்கக் கல் அகழ்ந்தெடுத்து வருவதால் அப்பகுதியில் பெரும் சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தி வருகின்றனர்.

எனினும், அகழ்வுப் பணிகளின் பின்னர் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மழைக்காலங்களில் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் முறையாக ஒழுங்குபடுத்தப்படாத அகழ்வுகள் மற்றும் மூடப்படாத குழிகள் பாரிய சுற்றுச்சூழல் சீரழிவுகளை ஏற்படுத்துகின்றன.

நிலத்தடி நீர் குறைதல், மண்ணரிப்பு மற்றும் தேயிலை தோட்டத்தில் நடுப்பகுதிகளில் பாதுகாப்பற்ற குழிகளால் தொழிலாளர்கள், எதிர்பாராதவிதமாக ஏனையவர்கள் அல்லது விலங்குகள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி பதிவாகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக சட்டவிரோதமாக அல்லது முறையாக மூடப்படாமல் திறந்த நிலையில் விடப்படும் குழிகளில் தேங்கும் மழைநீர், நுளம்புகள் பெருக வழிவகுத்து டெங்கு போன்ற நோய்களையும் உருவாக்குகிறது எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253378
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
மாணிக்கக் கல்தோட்டம்சுற்றுச்சூழல்ஆபத்துபிரச்சனை
BestWeb.lk Top Web 2026 June Qualified