சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கை மனவளக்கலை மன்றம் ஏற்பாடு செய்திருக்கும் சிறப்பு யோகா நிகழ்ச்சி எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் இலங்கை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் அருள்நிதி மதுரைவீரன், செயலாளர் அருள்நிதி செல்வரட்ணம், நிர்வாக குழு உறுப்பினர்கள், மன்ற அங்கத்தினர்கள், கொழும்பு இந்துக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
