Breaking
பஸ் மோதி பாடசாலை ஆசிரியை சம்பவ இடத்திலேயே பலி!
WorldVirakesari

பஸ் மோதி பாடசாலை ஆசிரியை சம்பவ இடத்திலேயே பலி!

June 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் விபத்து ನಡೆದಿದೆ.
  2. 02ஆசிரியையுடன் மோட்டார் சைக்கிள் பஸ் மோதி உயிரிழந்தார்.
  3. 0356 வயதான ஆசிரியையானவர் கல்கந்தேகம வித்தியாலயத்தில் வேலை செய்தார்.
  4. 04விபத்தில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
  5. 05உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் உள்ளது.

பூனாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (18) காலை, கண்டியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியை நிலைதடுமாறி விழுந்து, பஸ் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பூனாவை, கல்கந்தேகம வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த 56 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த ஆசிரியையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் பூனாவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250243
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
விபத்துபூனாவைஅசிரியைபஸ்பொலிஸ்
BestWeb.lk Top Web 2026 June Qualified