மோசடி குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், குறித்த விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடி நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.
லங்கா உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் சுமார் 88 இலட்சம் ரூபா பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கமைய, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
