நானுஓயா - பதுளை வரையிலான ரயில் சேவை எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
டித்வா புயல் தாக்கத்தால் சேதமடைந்த நானுஓயா - அம்பேவல வரையிலான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே அப்பாதை வழியாக மீண்டும் ரயில் சேவைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
