Breaking
தெமட்டகொடையில் 19 துப்பாக்கிகள் மீட்பு ; தப்பியோடிய பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது
WorldVirakesari

தெமட்டகொடையில் 19 துப்பாக்கிகள் மீட்பு ; தப்பியோடிய பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது

June 17, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01தெமட்டகொடை பகுதியில் 19 துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
  2. 02கட்டுக்கோப்பாக 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  3. 03மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசேட தேடுதல் நடத்தப்பட்டது.
  4. 04முதன்மை சந்தேகநபர்கள் தப்பியோடி தலைமறைவாகினர்.
  5. 05கதிர்காமத்தில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
  6. 06கைது செய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்தவர்.
  7. 07முச்சக்கரவண்டி சந்தேகத்தின் அடிப்படையில் கைபற்றப்பட்டது.
  8. 08மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

(செ.சுபதர்ஷனி)

தெமட்டகொடை பகுதியில் கடந்த ஜூன் 3ஆம் திகதி 19 துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ஆணும் பெண்ணும் கதிர்காமம் பகுதியிலுள்ள விடுதியொன்றில் வைத்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 3ஆம் திகதி மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் தெமட்டகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் விசேட தேடுதல் வேட்டையொன்று நடத்தப்பட்டது.

இதன்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 19 ரிவோல்வர் ' ரக துப்பாக்கிகள், 24 ரி-56 ரக தோட்டாக்கள், 100,400 போதை மாத்திரைகள் மற்றும் 15 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ், சம்பவ இடத்திலேயே இரு பெண்கள் உட்பட நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

எனினும், இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ஆணும் பெண்ணும் பொலிஸார் வருவதை அறிந்து அப்பகுதியிலிருந்து தப்பியோடி தலைமறைவாகியிருந்தனர்.

இந்நிலையிலேயே, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (16) செவ்வாய்க்கிழமை அதிகாலை கதிர்காமம் பகுதியிலுள்ள விடுதியொன்றில், மறைந்திருந்த பிரதான சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 28 வயதுடைய வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்கள் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250145
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
துப்பாக்கிகள்போதைப்பொருள்கைதுவிசாரணைசந்தேகநபர்கள்
BestWeb.lk Top Web 2026 June Qualified