Breaking
வீட்டு வேலைகளை முறையான தொழிலாக அங்கீகரிக்க நடவடிக்கை ஆரம்பம் – தொழிலாளர் உரிமைகள் வலுப்படுத்த அரசு திட்டம்
WorldVirakesari

வீட்டு வேலைகளை முறையான தொழிலாக அங்கீகரிக்க நடவடிக்கை ஆரம்பம் – தொழிலாளர் உரிமைகள் வலுப்படுத்த அரசு திட்டம்

June 16, 2026·3 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01வீட்டு வேலைகளை தொழிலாளராக அங்கீகரிக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
  2. 02சர்வதேச வீட்டு வேலைித் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  3. 03இலங்கை வீட்டு பணியாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
  4. 04உறிமைகள் உறுதிப்படுத்துவதற்காக நிபுணர் குழு செயல்படுகிறது.
  5. 05சட்ட திருத்தங்களை கொண்டு வருவது எதிர்பார்க்கப்படுகிறது.
  6. 061871 மற்றும் 1912 சட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளன.
  7. 07இஷாலினி வழக்கு வீட்டுப் பணியாளர்கள் பாதுகாப்பை மீண்டும் விவாதத்திற்கு கொண்டு வந்தது.

(செ.கவிஷனா)

வீட்டு வேலைகளை ஒரு முறையான வேலைத் துறையாக அங்கீகரித்து, தொழிலாளர் உரிமைகளை வலுப்படுத்துவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சு விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2011 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்ட வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தொடர்பான 189 ஆம் இலக்க உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு வீட்டு வேலைத் தொழிலாளருக்கும் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வேலை என்ற தொனிப்பொருளின் கீழ் நேற்று சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றும் இலங்கை வீட்டு வேலைத் தொழிலாளர்கள், குழந்தைகளின் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் வீட்டு நிர்வாகம் போன்ற சேவைகளை வழங்குவதன் மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும், இலட்சக்கணக்கான மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்குப் பக்கபலமாக இருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இத்தகைய தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், நவீன மற்றும் உள்ளடக்கிய பணிச்சூழலை உருவாக்குவதற்காக சட்டங்களில் திருத்தங்களைப் பரிந்துரைக்கவும் தொழிலாளர் அமைச்சின் செயலாளரின் தலைமையில் நிபுணர் குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்களின் பின்னர், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 189 ஆம் இலக்க உடன்படிக்கையில் இலங்கை கையொப்பமிட்டு அதனை அங்கீகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதுடன், இதன் மூலம் பாகுபாடு, சுரண்டல் மற்றும் வன்முறைகளற்ற பாதுகாப்பான பணிச்சூழல் உருவாக்கப்படும் என்றும் தொழிலாளர் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

தொழிலாளர் அமைச்சின் இத்தகைய புதிய முயற்சிகளுக்கு மத்தியில், இலங்கையில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பாக தற்போதும் நடைமுறையில் உள்ள சட்டங்கள் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டவையாகும். உள்நாட்டில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பாக இன்றும் நடைமுறையில் இருப்பது பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட 1871 ஆம் ஆண்டின் வீட்டுப் பணியாளர் சட்டமும் (இது 1936 இல் திருத்தப்பட்டது), 1912 ஆம் ஆண்டின் சாரதிகள் சட்டமுமாகும். இத்துறை சார்ந்த புள்ளிவிபரங்களின்படி, இலங்கையில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பாக இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டிலேயே அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அக்காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக நாட்டில் சுமார் 80,000 வீட்டுப் பணியாளர்கள் இருந்ததோடு, அவர்களுள் 66,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வீட்டுப் பணித்துறை, அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த சமூகக் கலந்துரையாடல்கள் அண்மைக் காலத்தில் மீண்டும் தீவிரமடைவதற்குக் காரணமாய் அமைந்தது, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 'இஷாலினி' என்ற சிறுமியின் மரணமாகும். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த "இஷாலினி வழக்கு" நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்தே, காலாவதியான சட்டங்களை மாற்றி, வீட்டுப் பணியாளர்களுக்கு முறையான சட்டப் பாதுகாப்பை வழங்க வேண்டியதன் அவசியம் நாடு தழுவிய ரீதியில் பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250034
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
வீட்டு வேலைஅதிகாரங்கள்தமிழக அரசுசர்வதேச தினம்சட்ட திருத்தம்
BestWeb.lk Top Web 2026 June Qualified