Breaking
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை - மூவர் கைது!
WorldVirakesari

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை - மூவர் கைது!

June 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி முடிந்தது.
  2. 02மத்திய ஊழல் ஒழிப்புப் படையினர் முற்றுகையிட்டனர்.
  3. 03மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  4. 04கைது செய்யப்பட்ட பெண்கள் 31, 35 மற்றும் 40 வயதினர்.
  5. 05இவர்கள் வாரியப்பொல, பூஸ்ஸ, மத்துகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
  6. 06பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினர் முற்றுகையிட்டு, மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (15) நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொப்பரா சந்தி பகுதியில், வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இந்த முற்றுகை நடத்தப்பட்டது.

இதன்போது, குறித்த விடுதியை முகாமைத்துவம் செய்த பெண் ஒருவரும், விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக அங்கு தங்கியிருந்த மேலும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 31, 35 மற்றும் 40 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் வாரியப்பொல, பூஸ்ஸ மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250040
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
விபச்சாரம்கைதுபோலிஸார்
BestWeb.lk Top Web 2026 June Qualified