Breaking
அதிவேக நெடுஞ்சாலைகளில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயம்!
WorldVirakesari

அதிவேக நெடுஞ்சாலைகளில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயம்!

June 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாகிறது.
  2. 02இது எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வர உள்ளது.
  3. 03முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிகளுக்குப் பாவனை கட்டாயம்.
  4. 04சலுகைக் காலம் ஜூன் 19க்கு முடிவடைகிறது.
  5. 05இதற்கு பிறகு எவ்வித விதிவிலக்குகளும் அமுலில் வராது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஆசனப் பட்டி அணிவது எதிர்வரும் 20ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக வீதிப் பாதுகாப்புப் பற்றிய தேசிய சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வீதிப் பாதுகாப்புப் பற்றிய தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன் இருக்கைகளில் இருப்பவர்கள் மட்டுமன்றி, பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளும் ஆசனப் பட்டி அணிவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

அதற்கமைய, எதிர்வரும்; 20ஆம் திகதி முதல் இந்த ஆசனப் பட்டி சட்டம் எவ்வித விதிவிலக்குகளுமின்றி கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என வீதிப் பாதுகாப்புப் பற்றிய தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250044
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
வாகனங்கள்சாலை பாதுகாப்புஅதிவேக நெடுஞ்சாலைகள்
BestWeb.lk Top Web 2026 June Qualified